Wednesday, December 30, 2009
??
மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா?
தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா?
Friday, December 11, 2009
நீ !
Tuesday, December 8, 2009
அடுத்த பிறவியில்....
நம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.
மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !
காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே…..
உன் தாயாக !
உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !
கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !
மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !
உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !
உலகை
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !
என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !
Saturday, December 5, 2009
Wednesday, November 25, 2009
Saturday, November 7, 2009
Wednesday, November 4, 2009
மொட்டுகளே....
Wednesday, October 28, 2009
இது தான் உண்மை..
Friday, October 9, 2009
Wednesday, October 7, 2009
காதல் சொன்ன கணம்!
(காதலை சொல்லும் போது....
நாம் கொண்ட காதலை,
அவள் கண்களிலும் பார்க்கும்
அந்த அழகான தருணத்தை......
இதை விட அழகாய் சொல்ல முடியுமா?
என்னை கேட்டால் - முடியாது )
எகிறி குதித்தேன்
வானம் இடித்தது..
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில்
பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது
ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்
காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே !
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே
கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்
மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே
வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே
Saturday, October 3, 2009
Wednesday, September 30, 2009
Friday, September 25, 2009
Thursday, September 24, 2009
நிஜம்...
Monday, September 21, 2009
தசரதன் நான்....
Friday, September 18, 2009
சக்தி இல்லை...
Wednesday, September 16, 2009
Tuesday, September 15, 2009
Monday, September 14, 2009
குழந்தையாய் :)
Subscribe to:
Posts (Atom)