Wednesday, October 28, 2009

இது தான் உண்மை..



ஓர் சிவகாசி சிறுவனின்
கல்வி பறிக்க...
தானும் ஓர் காரணம்
என்பதை உணர்ந்து தான்..

ஒவ்வொரு முறையும்,
தீக்குளித்து கொள்கிறதா
தீக்குச்சி??

Friday, October 9, 2009

நீர் பிரச்சனை...



பிறந்த வீட்டுக்கும்
புகுந்த வீட்டுக்கும் பிரச்சனை....
என்ன செய்ய போகிறாள்?
எங்கள் மகள் "காவேரி" :(

Wednesday, October 7, 2009

காதல் சொன்ன கணம்!



(காதலை சொல்லும் போது....

நாம் கொண்ட காதலை,
அவள் கண்களிலும் பார்க்கும்
அந்த அழகான தருணத்தை......

இதை விட அழகாய் சொல்ல முடியுமா?
என்னை கேட்டால் - முடியாது )

எகிறி குதித்தேன்
வானம் இடித்தது..

பாதங்கள் இரண்டும் பறவையானது

விரல்களின் காம்பில்
பூக்கள் முளைத்தது

புருவங்கள் இறங்கி மீசையானது

ஆனந்த கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன்
ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன்
ஒரு இலையாய்


காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே !

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே

வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்

ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்


மணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீரா

கரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையா

காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே

வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே

தீ...



கையை சுடும்
என்றாலும்...

தீயை தீண்டும்
பிள்ளை போல்

உன்னையே மீண்டும் நினைக்கிறன் !

Saturday, October 3, 2009

அழகு !



"அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்"
என்பது உண்மை என்றால்
என் முகத்தில் தெரிகிறதா?
அவள் முகம்!!!