Wednesday, December 30, 2009

??



மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா?
தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா?

Friday, December 11, 2009

நீ !



ஒரு சொட்டுக் கடலும் நீ,
ஒரு பொட்டு வானம் நீ,
ஒரு புள்ளிப் புயலும் நீ,
பிரம்மித்தேன் !!!
ஒளிவீசும் இரவும் நீ,
உயிர்கேட்கும் அமுதம் நீ,
இமைமூடும் விழியும் நீ,
யாசித்தேன்.............

Tuesday, December 8, 2009

அடுத்த பிறவியில்....



நம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

Saturday, December 5, 2009

ஏக்கம் !



எப்போது கிடைக்கும்,
ஒரே நூலாய்..
பைபிள், கீதை, குரான்.