Wednesday, September 30, 2009

நம் காதல்...



கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும் !!

தர்மம் !



பசுவினை பாம்பென்று
சாட்சி சொல்ல முடியும்...
காம்பினில் விஷம் என்ன
கறக்கவா முடியும் ?

Friday, September 25, 2009

வறுமை...



பாழாய் போன மகள்
ஆளாகி போனதால்
தாயும் இங்கே....
தாவணிக்கு மாறினாள் :(

Thursday, September 24, 2009

நிஜம்...



இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு
விலகி விடும்....

நீ மட்டும் தான்
இந்த உலகத்திலே
உனக்கு துணை
என்று விளங்கிவிடும்.

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை....

எத்தனை கோடி கண்ணீர்
மண்மீது விழுந்து இருக்கும்
அத்தனை கண்ட பின்பும்
பூமி இன்றும் பூ பூக்கும்....

Monday, September 21, 2009

தசரதன் நான்....



தசரதன் போல்...
ஆயிரம் திருமணம் செய்து கொள்ள
ஆசை எனக்கு.

ஆனால் ஒன்று,
ஆயிரம் மனைவியும்
நீயாக இருக்க வேண்டும்! - தபு சங்கர்

Friday, September 18, 2009

சக்தி இல்லை...


நெஞ்சில் ஈரம் இல்லாதவன்
என்று கூட
உறவுகள் என்னை தூற்றட்டும்.........

கவலை இல்லை.

இழவு வீடுகளுக்கெல்லாம்
நான் வரவேமாட்டேன்

அங்கு கூட,
நீ அழுவதை பார்க்க முடியாது என்னால் ! - வைரமுத்து

வானிலை..



நீ என்பது மழையாக,
நான் என்பது வெயிலாக...
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகம் ஆகும்!

Wednesday, September 16, 2009

பிரசவ அறை....

Tuesday, September 15, 2009

இறக்க முடியாத சிலுவை...

இந்தியா காதலின் பூமி தான்....
காதலர்கள் பூமி அல்ல :(

Monday, September 14, 2009

குழந்தையாய் :)


பெ: நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன்.
உன் கவிதையினால் வயதறிந்தேன்...

என்னை மறுபடியும்
சிறு பிள்ளையாய் செய்வாயா?

ஆ: கட்டிலிடும் வயதில்...
தொட்டிலிட சொன்னால்
சரியா? சரியா?

பெ: கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால்...
பிழையா? பிழையா?